மூலவேர றிந்துகொண்டால் மூன்று லகமும் முன்பாகவே கண்டுநித்ய முத்தி சேரலாம் சாலவேர றிந்ததாலே தான்பய னுண்டோ சகத்தைப்பொய் யென்றுதெளிந் தாடாய் பாம்பே. | 101 |
| |
சகத்தனாதி யென்றிடாது தான னாதியார் சமைந்ததென் றுரைப்பார்கள் சத்தை யறியார் மகத்துவ நிலைகற்ப வன்மை யல்லாது மற்றும் வன்மை யில்லையேயென் றாடாய் பாம்பே. | 102 |
| |
ஆயிரத்தெட்டி தழ்வீட்டி லமர்ந்த சித்தன் அண்டமெல்லாம் நிறைந்திடும் அற்புதச் சித்தன் காயமில்லா தோங்கிவளர் காரணச் சித்தன் கண்ணுளொளி யாயினானென் றாடாய் பாம்பே. | 103 |
| |
நாற்பத்துமுக் கோணநிலை நாப்ப ணதாக நாடுமக்க ரச்சொரூப நாய கன்தனை மேற்படுத்திக் கொண்டாலந்த மேலு லகெலாம் மெல்லடிக்குத் தொண்டேயாமென் றாடாய் பாம்பே. | 104 |
| |
கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே கொண்டகோல முள்ளவர்கள் கோனிலை காணார் கூத்தாடிக்கூத் தாடியேநீ யாடாய் பாம்பே. | 105 |
| |
ஆறுகலைக் குச்சுக்குள்ளே ஆடுமொருவன் அயல்வீடு போகுமுன்னே அரண்கோ லிக்கொள்ளு வேறுபட்டால் அவன்றனை மீட்ட லரிதே மேவிமுன்னே விடாதுகொண் டாடாய் பாம்பே. | 106 |
| |
எண்ணரிய புண்ணியங்கள் எல்லாஞ் செய்துமென் ஏகனடி நெஞ்சமதி லெண்ணா விடிலே பண்ணரிய தவப்பயன் பத்தி யில்லையேற் பாழ்படு மென்றுதுணிந் தாடாய் பாம்பே. | 107 |
| |
எவ்வுலகுஞ் சொந்தமதாய் எய்தும் பயனென் எங்களாதி பதாம்புயம் எண்ணாக் காலையில் | |