இவ்வுலக வாழ்வுதானு மின்றே அறுமென்று எண்ணிக்கர்த்தன் அடிநினைந் தாடாய் பாம்பே. | 108 |
| |
மணக்கோலங் கொண்டுமிக மனம கிழ்ந்துமே மக்கள்மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய் பிணக்கோலங் கண்டுபின்னுந் துறவா விட்டால் பிறப்புக்கே துணையாமென் றாடாய் பாம்பே. | 109 |
| |
பிறப்பையும் இறப்பையும் அறுத்து விடயான் பெருமருந் தொன்று சொல்வேன் பெட்புடன் கேளாய் திறப்புடன் மனப்பூட்டுஞ் சிந்தைக் கதவும் திறந்திடும் வகையறிந் தாடாய் பாம்பே. | 110 |
| |
இறந்தவர் ஐவரவர் இட்ட மானவர் எய்தும்அவ ரிறந்தாரென் றெல்ல வார்க்குஞ்சொல் மறந்தவர் ஒருவரென்றே மண்ணினி லுள்ளோர் வகையறிந் திடவேநின் றாடாய் பாம்பே. | 111 |
| |
எண்சீர் விருத்தம் ஆகார முதலிலே பாம்ப தாக ஆனந்த வயலிலே படம் விரித்தே ஊகார முதலிலே யொத்தொ டுங்கி ஓடி வகாரத்தி னாவை நீட்டிச் சீகாரங் கிடந்ததோர் மந்திரத் தைச் சித்தப்பி டாரனார் போதஞ் செய்ய மாகாரப் பிறப்பையும் வேர றுத்து மாயபந்தங் கடந்தோமென் றாடாய் பாம்பே. | 112 |
| |
தந்திரஞ் சொல்லுவார் தம்மை யறிவார் தனிமந்தி ரஞ்சொல்லுவார் பொருளை யறியார் மந்திரஞ் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள் மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார். அந்தரஞ் சென்றுமே வேர்பி டுங்கி அருளென்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே இந்த மருந்தினைத் தின்பீ ராகில் இனிப்பிறப் பில்லையென் றாடாய் பாம்பே. | 113 |