களிமண்ணி னாலொரு கப்பல் சேர்த்தே கனமான பாய்மரங் காண நாட்டி அளிபுலந் தன்னையே சுக்கா னாக்கி அறிவென்னு மாதாரச் சீனி தூக்கி வெளியென்னும் வட்டத்தே யுள்ள டக்கி வேதாந்தக் கடலினை வெல்ல வோட்டித் தெளிவுறு ஞானியா ரோட்டுங் கப்பல் சீர்பாதஞ் சேர்ந்ததென் றாடாய் பாம்பே. | 114 |
| |
உள்ளத்துக் குள்ளே யுணர வேண்டும் உள்ளும் புறம்பையு மறிய வேண்டும் மெள்ளக் கனலை யெழுப்ப வேண்டும் வீதிப் புனலிலே செலுத்த வேண்டும் கள்ளப் புலனைக் கடிந்து விட்டுக் கண்ணுக்கு மூக்குமேற் காண நின்று தெள்ளு பரஞ்சோதி தன்னைத் தேடிச் சீர்பாதம் கண்டோமென் றாடாய் பாம்பே. | 115 |
| |
ஓங்காரக் கம்பத்தின் உச்சி மேலே உள்ளும் புறம்பையு மறியவேண்டும் ஆங்காரக் கோபத்தை யறுத்து விட்டே ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக் கொண்டே சாங்கால மில்லாமற் தாணு வோடே சட்டதிட்ட மாய்ச்சேர்ந்து சாந்த மாகத் தூங்காமல் தூங்கியே சுக மடைந்து தொந்தோம் தொந்தோமென் றாடாய் பாம்பே. | 116 |
| |
விரகக் குடத்திலே பாம்ப டைப்போம் வேதாந்த வெளியிலே விட்டே யாட்டுவோம் காரணங்க ளைப்பிடுங்கி இரைகொ டுப்போம் காலக் கடுவெளிநின் றாட்டு விப்போம் துரகந் தனிலேறித் தொல்லுல கெங்கும் சுற்றிவலம் வந்து நித்ய சூட்சங் கண்டும் உரையற்ற மந்திரஞ் சொல்லி மீட்டோம் ஒருநான்கும் பெற்றோமென் றாடாய் பாம்பே. | 117 |