காயக் குடத்திலே நின்ற பாம்பைக் கருணைக் கடலிலே தியங்க விட்டு நேயச் சுழுமுனை நீடு பாய்ச்சி நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி மாயப் பெருவெளி தன்னி லேறி மாசற்ற பொருளினை வாய்க்கத் தேடி ஆயத் துறைகடந் தப்பாற் பாழின் ஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே. | 118 |
| |
மூலத் தலத்திலே நின்ற கருத்தை முற்றுஞ் சுழுமுனை தன்னி லூடே மேலத் தலத்திலே விந்து வட்டம் வேலை வழியிலே மேவி வாழும் பாலத் திருத்தாய்க் கருணை யதனால் பரகதி ஞானசொ ரூபமாகி ஆலச் சயனத்து மாலுட னின்றே ஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே. | 119 |
| |
புலனைந்து வீதியில் வையாளி பாயும் புரவி யெனுமனதை ஒருமைப் படுத்தி மலபுந்த வுலகங் கடந்த தாலே மன்னுகுரு பாதத்தி னிலையை நாடித் தலமைந்து பூலோகங் கடந்த தாலே சந்திர மண்டலமுங் கடந்த தாகும் அலமந்து பூலோகக் கடலை நீக்கி ஆனந்த மாகிநின் றாடாய் பாம்பே. | 120 |
| |
குருவென்னும் ஆசானி னுருவெ டுத்துக் குறியான ஞானந்துப் பாக்கியாக்கி அருளென்னும் அருளையே உண்டை யாக்கி ஆனந்த மாகவே அதைக்க டந்தே மருளென்னு மாதர்மன நெறியைத் தொட்டு வாங்காம லெரிந்திட நெட்டை யிட்டு பருவளைக் குள்ளேயே பட்ட தென்றே பற்றானைப் பற்றிநின் றாடாய் பாம்பே. | 121 |