“ஒப்பனை அல்லவடி - அகப்பேய் உன் ஆணை சொன்னேனே அப்புடனுப் பெனவே - அகப்பேய் ஆராய்ந் திருப்பாயே மனப்பேயை அடக்கி வென்ற அகப்பேய் சித்தர் திருவையாற்றில் சித்தியடைந்தார் என்று போகர் குறிப்பிடுகின்றார். நஞ்சுண்ண வேண்டாவே அகப்பேய் நாயகன் தாள்பெறவே நெஞ்சு மலையாதே அகப்பேய் நீயொன்றும் சொல்லாதே. | 1 | | | | பராபர மானதடி அகப்பேய் பரவையாய் வந்ததடி தராதல மேழ்புவியும் அகப்பேய் தானே படைத்ததடி. | 2 | | | | நாத வேதமடி அகப்பேய் நன்னடங் கண்டாயோ பாதஞ் சத்தியடி அகப்பேய் பரவிந்து நாதமடி | 3 | | | | விந்து நாதமடி அகப்பேய் மெய்யாக வந்ததடி ஐந்து பெரும்பூதம் அகப்பேய் அதனிட மானதடி | 4 | | | | நாலு பாதமடி அகப்பேய் நன்னெறி கண்டாயே மூல மானதல்லால் அகப்பேய் முத்தி யல்லவடி. | 5 | | | | வாக்காதி யைந்தடியோ அகப்பேய் வந்த வகைகேளாய் | |
|