பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்237


“ஒப்பனை அல்லவடி - அகப்பேய்
    உன் ஆணை சொன்னேனே
அப்புடனுப் பெனவே - அகப்பேய்
    ஆராய்ந் திருப்பாயே

     மனப்பேயை  அடக்கி  வென்ற  அகப்பேய்  சித்தர் திருவையாற்றில்
சித்தியடைந்தார் என்று போகர் குறிப்பிடுகின்றார்.

நஞ்சுண்ண வேண்டாவே                      அகப்பேய்
     நாயகன் தாள்பெறவே
நெஞ்சு மலையாதே                          அகப்பேய்
     நீயொன்றும் சொல்லாதே.
1
  
பராபர மானதடி                             அகப்பேய்
     பரவையாய் வந்ததடி
தராதல மேழ்புவியும்                         அகப்பேய்
     தானே படைத்ததடி.
2
  
நாத வேதமடி                               அகப்பேய்
     நன்னடங் கண்டாயோ
பாதஞ் சத்தியடி                             அகப்பேய்
     பரவிந்து நாதமடி
3
  
விந்து நாதமடி                               அகப்பேய்
     மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும்பூதம்                            அகப்பேய்
     அதனிட மானதடி
4
  
நாலு பாதமடி                                அகப்பேய்
     நன்னெறி கண்டாயே
மூல மானதல்லால்                            அகப்பேய்
     முத்தி யல்லவடி.
5
  
வாக்காதி யைந்தடியோ                        அகப்பேய்
     வந்த வகைகேளாய்