பக்கம் எண் :

238சித்தர் பாடல்கள்

ஒக்கம தானதடி                             அகப்பேய்
     உண்மைய தல்லவடி.
6
  
சத்தாதி யைந்தடியோ                        அகப்பேய்
     சாத்திர மானதடி
மித்தையு மாகுமிடி                           அகப்பேய்
     மெய்யது சொன்னேனே.
7
  
வசனாதி யைந்தடியோ                        அகப்பேய்
     வண்மையாய் வந்ததடி
தெசநாடி பத்தேடி                            அகப்பேய்
     திடனிது கண்டாயே.
8
  
காரண மானதெல்லாம்                        அகப்பேய்
     கண்டது சொன்னேனே
மாரணங் கண்டாயே                          அகப்பேய்
     வந்தவி தங்களெல்லாம்
9
  
ஆறு தத்துவமும்                             அகப்பேய்
     ஆகமஞ் சொன்னதடி
மாறாத மண்டலமும்                           அகப்பேய்
     வந்தது மூன்றடியே.
10
  
பிருதிவி பொன்னிறமே                        அகப்பேய்
     பேதைமை யல்லவடி
உருவது நீரடியோ                            அகப்பேய்
     உள்ளது வெள்ளையடி.
11
  
தேயு செம்மையடி                            அகப்பேய்
     திடனது கண்டாயே
வாயு நீலமடி                                அகப்பேய்
     வான்பொருள் சொல்வேனே.
12
  
வான மஞ்சடியோ                            அகப்பேய்
     வந்தது நீகேளாய்
ஊனம தாகாதே                             அகப்பேய்
     உள்ளது சொன்னேனே.
13