ஒக்கம தானதடி அகப்பேய் உண்மைய தல்லவடி. | 6 |
| | |
சத்தாதி யைந்தடியோ அகப்பேய் சாத்திர மானதடி மித்தையு மாகுமிடி அகப்பேய் மெய்யது சொன்னேனே. | 7 |
| | |
வசனாதி யைந்தடியோ அகப்பேய் வண்மையாய் வந்ததடி தெசநாடி பத்தேடி அகப்பேய் திடனிது கண்டாயே. | 8 |
| | |
காரண மானதெல்லாம் அகப்பேய் கண்டது சொன்னேனே மாரணங் கண்டாயே அகப்பேய் வந்தவி தங்களெல்லாம் | 9 |
| | |
ஆறு தத்துவமும் அகப்பேய் ஆகமஞ் சொன்னதடி மாறாத மண்டலமும் அகப்பேய் வந்தது மூன்றடியே. | 10 |
| | |
பிருதிவி பொன்னிறமே அகப்பேய் பேதைமை யல்லவடி உருவது நீரடியோ அகப்பேய் உள்ளது வெள்ளையடி. | 11 |
| | |
தேயு செம்மையடி அகப்பேய் திடனது கண்டாயே வாயு நீலமடி அகப்பேய் வான்பொருள் சொல்வேனே. | 12 |
| | |
வான மஞ்சடியோ அகப்பேய் வந்தது நீகேளாய் ஊனம தாகாதே அகப்பேய் உள்ளது சொன்னேனே. | 13 |