பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்239


அகார மித்தனையும்                          அகப்பேய்
     அங்கென் றெழுந்ததடி
உகாரங் கூடியடி                             அகப்பேய்
     உருவாகி வந்ததடி.
14
  
மாகார மாயையடி                            அகப்பேய்
     மலமது சொன்னேனே
சிகார மூலமடி                               அகப்பேய்
     சிந்தித்துக் கொள்வாயே.
15
  
வன்னம் புவனமடி                            அகப்பேய்
     மந்திர தந்திரமும்
இன்னமுஞ் சொல்வேனே                       அகப்பேய்
     இம்மென்று கேட்பாயே.
16
  
அத்தி வரைவாடி                             அகப்பேய்
     ஐம்பத்தோ ரட்சரமும்
மித்தையாங் கண்டாயே                        அகப்பேய்
     மெய்யென்று நம்பாதே.
17
  
தத்துவ மானதடி                              அகப்பேய்
     சகலமாய் வந்ததடி
புத்தியுஞ் சொன்னேனே                        அகப்பேய்
     பூத வடிவலவோ.
18
  
இந்த விதங்களெல்லாம்                        அகப்பேய்
     எம்மிறை யல்லவடி
அந்த விதம்வேறே                            அகப்பேய்
     ஆராய்ந்து காணாயோ.
19
  
பாவந் தீரவென்றால்                          அகப்பேய்
     பாவிக்க லாகாதே
சாவது மில்லையடி                            அகப்பேய்
     சற்குரு பாதமடி.
20
  
எத்தனை சொன்னாலும்                        அகப்பேய்
     என்மனந் தேறாதே