பக்கம் எண் :

240சித்தர் பாடல்கள்

சித்து மசித்தும்விட்டே                      அகப்பேய்
     சேர்த்துநீ காண்பாயே.
21
  
சமய மாறுபடி                               அகப்பேய்
     தம்மாலே வந்தவடி
அமைய நின்றவிடம்                          அகப்பேய்
     ஆராய்ந்து சொல்வாயே.
22
  
ஆறாறு மாகுமடி                             அகப்பேய்
     ஆகாது சொன்னேனே
வேறே யுண்டானால்                          அகப்பேய்
     மெய்யது சொல்வாயே.
23
  
உன்னை யறிந்தக்கால்                         அகப்பேய்
     ஒன்றையுங் சேராயே
உன்னை யறியும்வகை                         அகப்பேய்
     உள்ளது சொல்வேனே.
24
  
சரியை யாகாதே                             அகப்பேய்
     சாலோகங் கண்டாயே
கிரியை செய்தாலும்                          அகப்பேய்
     கிட்டுவ தொன்றுமில்லை.
25
  
யோக மாகாதே                             அகப்பேய்
     உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி                              அகப்பேய்
     தேடாது சொன்னேனே.
26
  
ஐந்துதலை நாகமடி                          அகப்பேய்
     ஆதாயங் கொஞ்சமடி
இந்தவிஷந் தீர்க்கும்                         அகப்பேய்
     எம்மிறை கண்டாயே.
27
  
இறைவ னென்றதெல்லாம்                     அகப்பேய்
     எந்த விதமாகும்
அறை நீகேளாய்                            அகப்பேய்
     ஆனந்த மானதடி.
28