பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்241


கண்டு கொண்டேனே                         அகப்பேய்
     காதல் விண்டேனே
உண்டு கொண்டேனே                         அகப்பேய்
     உள்ளது சொன்னாயே.
29
  
உள்ளது சொன்னாலும்                        அகப்பேய்
     உன்னாலே காண்பாயே
கள்ளமுந் தீராதே                            அகப்பேய்
     கண்டாக்குக் காமமடி.
30
  
அறிந்து நின்றாலும்                           அகப்பேய்
     அஞ்சார்கள் சொன்னேனே
புரிந்த வல்வினையும்                          அகப்பேய்
     போகாதே யுன்னைவிட்டு.
31
  
ஈசன் பாசமடி                                அகப்பேய்
     இவ்வண்ணங் கண்டதெல்லாம்
பாசம் பயின்றதடி                             அகப்பேய்
     பாரமது கண்டாயே.
32
  
சாத்திர சூத்திரமும்                           அகப்பேய்
     சங்கற்ப மானதெல்லாம்
பார்த்திட லாகாதே                           அகப்பேய்
     பாழ்பலங் கண்டாயே.
33
  
ஆறு கண்டாயோ                            அகப்பேய்
     அந்த வினைதீர
தேறித் தெளிவதற்கே                         அகப்பேய்
     தீர்த்தமு மாடாயே.
34
  
எத்தனை காலமுந்தான்                        அகப்பேய்
     யோக மிருந்தாலென்
மூத்தனு மாவாயோ                           அகப்பேய்
     மோட்சமு முண்டாமோ.
35
  
நாச மாவதற்கே                              அகப்பேய்
     நாடாதே சொன்னேனே