பாசம் போனாலும் அகப்பேய் பசுக்களும் போகாவே. | 36 |
| | |
நாண மேதுக்கடி அகப்பேய் நல்வினை தீர்ந்தக்கால் காண வேணுமென்றால் அகப்பேய் காணக் கிடையாதே. | 37 |
| | |
சும்மா இருந்துவிடாய் அகப்பேய் சூத்திரஞ் சொன்னேனே சும்மா இருந்தவிடம் அகப்பேய் சுட்டது கண்டாயே. | 38 |
| | |
உன்றனைக் காணாதே அகப்பேய் ஊனுள் நுழைந்தாயே என்றனைக் காணாதே அகப்பேய் இடத்தில் வந்தாயே. | 39 |
| | |
வான மோடிவரில் அகப்பேய் வந்தும் பிறப்பாயே தேனை யுண்ணாமல் அகப்பேய் தெருவோ டலைந்தாயே. | 40 |
| | |
சைவ மானதடி அகப்பேய் தானாய் நின்றதடி சைவ மில்லையாகில் அகப்பேய் சலம்வருங் கண்டாயே. | 41 |
| | |
ஆசை யற்றவிடம் அகப்பேய் அசாரங் கண்டாயே ஈசன் பாசமடி அகப்பேய் எங்ஙனஞ் சென்றாலும். | 42 |
| | |
ஆணவ மூலமடி அகப்பேய் அகாரமாய் வந்ததடி கோணு முகாரமடி அகப்பேய் கூடப் பிறந்ததுவே. | 43 |