பக்கம் எண் :

244சித்தர் பாடல்கள்

பரத்துக் கடுத்தவிடம்                         அகப்பேய்
     பாழது கண்டாயே.
51
  
பஞ்ச முகமேது                              அகப்பேய்
     பஞ்சு படுத்தாலே
குஞ்சித பாதமடி                             அகப்பேய்
     குருபாதங் கண்டாயே.
52
  
பங்க மில்லையடி                           அகப்பேய்
     பாத மிருந்தவிடம்
கங்கையில் வந்ததெல்லாம்                    அகப்பேய்
     கண்டு தெளிவாயே.
53
  
தானது நின்றவிடம்                           அகப்பேய்
     சைவங் கண்டாயே
ஊனற நின்றவர்க்கே                          அகப்பேய்
     ஊனமொன் றில்லையடி.
54
  
சைவம் ஆருக்கடி                           அகப்பேய்
     தன்னை யறிந்தவர்க்கே
சைவ மானவிடம்                            அகப்பேய்
     சற்குரு பாதமடி.
55
  
பிறவி தீரவென்றால்                          அகப்பேய்
     பேதகம் பண்ணாதே
துறவி யானவர்கள்                           அகப்பேய்
     சும்மா இருப்பார்கள்.
56
  
ஆர லைந்தாலும்                            அகப்பேய்
     நீயலை யாதேயடி
ஊர லைந்தாலும்                             அகப்பேய்
     ஒன்றையும் நாடாதே.
57
  
தேனாறு பாயுமடி                             அகப்பேய்
     திருவடி கண்டவர்க்கே
ஊனாறு மில்லையடி                           அகப்பேய்
     ஒன்றையும் நாடாதே.
58