பரத்துக் கடுத்தவிடம் அகப்பேய் பாழது கண்டாயே. | 51 |
| |
பஞ்ச முகமேது அகப்பேய் பஞ்சு படுத்தாலே குஞ்சித பாதமடி அகப்பேய் குருபாதங் கண்டாயே. | 52 |
| |
பங்க மில்லையடி அகப்பேய் பாத மிருந்தவிடம் கங்கையில் வந்ததெல்லாம் அகப்பேய் கண்டு தெளிவாயே. | 53 |
| |
தானது நின்றவிடம் அகப்பேய் சைவங் கண்டாயே ஊனற நின்றவர்க்கே அகப்பேய் ஊனமொன் றில்லையடி. | 54 |
| |
சைவம் ஆருக்கடி அகப்பேய் தன்னை யறிந்தவர்க்கே சைவ மானவிடம் அகப்பேய் சற்குரு பாதமடி. | 55 |
| |
பிறவி தீரவென்றால் அகப்பேய் பேதகம் பண்ணாதே துறவி யானவர்கள் அகப்பேய் சும்மா இருப்பார்கள். | 56 |
| |
ஆர லைந்தாலும் அகப்பேய் நீயலை யாதேயடி ஊர லைந்தாலும் அகப்பேய் ஒன்றையும் நாடாதே. | 57 |
| |
தேனாறு பாயுமடி அகப்பேய் திருவடி கண்டவர்க்கே ஊனாறு மில்லையடி அகப்பேய் ஒன்றையும் நாடாதே. | 58 |