பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்245


வெள்ளை கறுப்பாமோ                       அகப்பேய்
     வெள்ளியும் செம்பாமோ
உள்ள துண்டோடி                            அகப்பேய்
     உன்னாணை கண்டாயே.
59
  
அறிவுள் மன்னுமடி                           அகப்பேய்
     ஆதார மில்லையடி
அறிவு பாசமடி                               அகப்பேய்
     அருளது கண்டாயே.
60
  
வாசியி லேறியபடி                           அகப்பேய்
     வான்பொருள் தேடாயோ
வாசியி லேறினாலும்                          அகப்பேய்
     வாராது சொன்னேனே.
61
  
தூராதி தூரமடி                              அகப்பேய்
     தூரமும் இல்லையடி
பாராமற் பாரடியோ                           அகப்பேய்
     பாழ்வினை தீரவென்றால்.
62
  
உண்டாக்கிக் கொண்டதல்ல                   அகப்பேய்
     உள்ளது சொன்னேனே
கண்டார்கள் சொல்வாரோ                    அகப்பேய்
     கற்பனை யற்றதடி.
63
  
நாலு மறைகாணா                           அகப்பேய்
     நாதனை யார்காண்பார்
நாலு மறைமுடிவில்                           அகப்பேய்
     நற்குரு பாதமடி.
64
  
மூல மில்லையடி                            அகப்பேய்
     முப்பொரு ளில்லையடி
மூல முண்டானால்                          அகப்பேய்
     முத்தியு முண்டாமே.
65
  
இந்திர சாலமடி                             அகப்பேய்
     எண்பத் தொருபதமும்