வெள்ளை கறுப்பாமோ அகப்பேய் வெள்ளியும் செம்பாமோ உள்ள துண்டோடி அகப்பேய் உன்னாணை கண்டாயே. | 59 |
| |
அறிவுள் மன்னுமடி அகப்பேய் ஆதார மில்லையடி அறிவு பாசமடி அகப்பேய் அருளது கண்டாயே. | 60 |
| |
வாசியி லேறியபடி அகப்பேய் வான்பொருள் தேடாயோ வாசியி லேறினாலும் அகப்பேய் வாராது சொன்னேனே. | 61 |
| |
தூராதி தூரமடி அகப்பேய் தூரமும் இல்லையடி பாராமற் பாரடியோ அகப்பேய் பாழ்வினை தீரவென்றால். | 62 |
| |
உண்டாக்கிக் கொண்டதல்ல அகப்பேய் உள்ளது சொன்னேனே கண்டார்கள் சொல்வாரோ அகப்பேய் கற்பனை யற்றதடி. | 63 |
| |
நாலு மறைகாணா அகப்பேய் நாதனை யார்காண்பார் நாலு மறைமுடிவில் அகப்பேய் நற்குரு பாதமடி. | 64 |
| |
மூல மில்லையடி அகப்பேய் முப்பொரு ளில்லையடி மூல முண்டானால் அகப்பேய் முத்தியு முண்டாமே. | 65 |
| |
இந்திர சாலமடி அகப்பேய் எண்பத் தொருபதமும் | |