பக்கம் எண் :

246சித்தர் பாடல்கள்

மந்திர மப்படியே                           அகப்பேய்
     வாயைத் திறவாதே.
66
  
பாழாக வேணுமென்றால்                       அகப்பேய்
     பார்த்ததை நம்பாதே
கேளாமற் சொன்னேனே                       அகப்பேய்
     கேள்வியு மில்லையடி
67
  
சாதி பேதமில்லை                            அகப்பேய்
     தானாகி நின்றவர்க்கே
ஓதி யுணர்ந்தாலும்                          அகப்பேய்
     ஒன்றுந்தா னில்லையடி.
68
  
சூழ வானமடி                               அகப்பேய்
     சுற்றி மரக்காவில்
வேழம் உண்டகனி                            அகப்பேய்
     மெய்யது கண்டாயே.
69
  
நானு மில்லையடி                             அகப்பேய்
     நாதனு மில்லையடி
தானு மில்லையடி                             அகப்பேய்
     சற்குரு வில்லையடி.
70
  
மந்திர மில்லையடி                           அகப்பேய்
     வாதனை யில்லையடி
தந்திர மில்லையடி                           அகப்பேய்
     சமய மழிந்ததடி.
71
  
பூசை பாசமடி                               அகப்பேய்
     போதமே கொட்டமடி
ஈசன் மாயையடி                              அகப்பேய்
     எல்லாமு மிப்படியே.
72
  
சொல்ல லாகாதோ                           அகப்பேய்
     சொன்னாலும் தோஷமடி
இல்லை இல்லையடி                           அகப்பேய்
     ஏகாந்தங் கண்டாயே.
73