“வேகமடக்கி விளங்கு மெய்ஞ்ஞானிக்கு யோகந் தானேதுக் கடி” என்று அவர் கேட்பது நியாயமாகத்தானே படுகிறது. உலகில் அஞ் ஞானம் ஒழிந்திட யார்க்கும் இலகும் கடவுளை ஏத்தி - நலமார் குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்கு நிதம்பார்த்து நெஞ்சில் நினை. பூரணங் கண்டோர்இப் பூமியிலேவரக் காரணம் இல்லையடி குதம்பாய் காரணம் இல்லையடி. | 1 | | | போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்குச் சாங்காலம் இல்லையடி குதம்பாய் சாங்காலம் இல்லையடி. | 2 | | | செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு முத்திதான் இல்லையடி குதம்பாய் முத்திதான் இல்லையடி. | 3 | | | வஸ்து தரிசன மாட்சியாய்க் கண்டோர்க்குக் கஸ்திசற்று இல்லையடி குதம்பாய் கஸ்திசற்று இல்லையடி. | 4 | | | பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக் குற்றங்கள் இல்லையடி குதம்பாய் குற்றங்கள் இல்லையடி. | 5 | | | காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச் சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய் சூட்சியாய்ப் பார்ப்பாயடி. | 6 | | | வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய் இட்டமாய்ப் பார்ப்பாயடி. | 7 |
|