பக்கம் எண் :

256சித்தர் பாடல்கள்

காரணம் சித்தென்றும் காரியம் சத்தென்றும்
     ஆரணஞ் சொல்லுமடி குதம்பாய்
     ஆரணஞ் சொல்லுமடி.
27
  
காரணம் முன்னென்றும் காரியம் பின்னென்றுந்
     தாரணி சொல்லுமடி குதம்பாய்
     தாரணி சொல்லுமடி.
28
  
ஆதிசகத்து என்று அநாதி மகத் தென்று
     மேதினி கூறுமடி குதம்பாய்
     மேதினி கூறுமடி.
29
  
ஐந்து தொழிற்கும் உரியோன் அநாதியை
     மந்திரம் போற்றுமடி குதம்பாய்
     மந்திரம் போற்றுமடி.
30
  
யானை தலையாய் எறும்பு கடை யாய்ப்பல்
     சேனையைத் தந்தானடி குதம்பாய்
     சேனையைத் தந்தானடி.
31
  
மண்ணள விட்டாலும் வத்துப் பெருமைக்கே
     எண்ணளவு வில்லையடி குதம்பாய்
     எண்ணளவு வில்லையடி.
32
  
ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
     சோதியாய் நின்றானடி குதம்பாய்
     சோதியாய் நின்றானடி.
33
  
சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன்
     தேவன் அவனாமடி குதம்பாய்
     தேவன் அவனாமடி.
34
  
சத்தம் சுயம்பு சுகுணம் சம்பூரணம்
     சத்தியம் உள்ளானடி குதம்பாய்
     சத்தியம் உள்ளானடி.
35
  
எங்கும் வியாபகம் ஈகை விவேங்கள்
     பொங்கமாய் உள்ளானடி குதம்பாய்
     பொங்கமாய் உள்ளானடி.
36