தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல் பார்க்கப் படாதானடி குதம்பாய் பார்க்கப்படா தானடி. | 37 |
| |
ஆத்துமந் தன்னை அரூபமா எண்ணினாய் கூத்தன் அவ்வாறு அல்லவோ குதம்பாய் கூத்தன் அவ்வாறு அல்லவோ. | 38 |
| |
அண்டத்தைத் தேவன் அளிக்க எண் ணும்போதே அண்டம் உண் டாயிற்றடி குதம்பாய் அண்டம் உண் டாயிற்றடி. | 39 |
| |
வானம் முற்றாக வளர்ந்திடு சின்னங்கள் தான் அவர் செய்தாரடி குதம்பாய் தான் அவர் செய்தாரடி. | 40 |
| |
ஒன்றும் இல்லாவெளிக் குள்ளேபல் லண்டத்தை நின்றிடச் செய்தானடி குதம்பாய் நின்றிடச் செய்தானடி. | 41 |
| |
கருவி களில்லாமற் காணும்பல் அண்டங்கள் உருவுறச் செய்தானடி குதம்பாய் உருவுறச் செய்தானடி. | 42 |
| |
எல்லா உயிர்களும் எந்த உலகமும் வல்லானைப் போற்றுமடி குதம்பாய் வல்லானைப் போற்றுமடி. | 43 |
| |
என்றும் அழியாமை எங்கு நிறைவாகி நின்றது பிரமமடி குதம்பாய் நின்றது பிரமமடி. | 44 |
| |
கண்டத்தை ஆள்கின்ற காவலர் போற்சோதி அண்டத்தை ஆள்கின்றதே குதம்பாய் அண்டத்தை ஆள்கின்றதே. | 45 |
| |
அண்டம் உண் டாகுமுன் ஆக அநாதியாய்க் கண்டது பிரமமடி குதம்பாய் கண்டது பிரமமடி. | 46 |