எந்த உயிர் கட்கும் எந்த உலகிற்கும் அந்தமாய் நின்றானடி குதம்பாய் அந்தமாய் நின்றாடின. | 47 |
| | |
தணிவான புத்தியால் தாணு அறியாதோர் அணுவேனும் இல்லையடி குதம்பாய் அணுவேனும் இல்லையடி. | 48 |
| | |
மூன்று தொழிலினை மூர்த்திசெய் யாவிடில் தோன்றாது உலகமடி குதம்பாய் தோன்றாது உலகமடி. | 49 |
| | |
சீரான தேவன் சிறப்பினைச் சொல்லவே யாரலே யாகுமடி? குதம்பாய் யாரலே யாகுமடி? | 50 |
| | |
முத்திநிலை பெறும் வழி எல்லார்க்கும் மேலான ஏகனைப் பற்றிய வல்லார்க்கு முத்தியடி குதம்பாய் வல்லார்க்கு முத்தியடி. | 51 |
| | |
பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடக் கற்றார்க்கு முத்தியடி குதம்பாய் கற்றார்க்கு முத்தியடி. | 52 |
| | |
பந்தத்தை விட்டொளிர் பந்தத்தைப் பற்றினால் சந்தத முத்தியடி குதம்பாய் சந்தத முத்தியடி. | 53 |
| | |
ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற ஊமைக்கு முத்தியடி குதம்பாய் ஊமைக்கு முத்தியடி. | 54 |
| | |
மந்தி மனத்தை வயப்படுத் திட்டார்க்கு வந்தெய்தும் முத்தியடி குதம்பாய் வந்தெய்தும் முத்தியடி. | 55 |