பக்கம் எண் :

260சித்தர் பாடல்கள்

சேலை மினுக்கதும் செம்பொன் மினுக்கதும்
     மேலை மினுக்காமடி குதம்பாய்
     மேலை மினுக்காமடி.
65
  
பீவாச முள்ளவள் பீறலு உடம்புக்குப்
     பூவாச மேதுக்கடி குதம்பாய்
     பூவாச மேதுக்கடி.
66
  
போராட்டஞ் செய்து புழுத்த வுடம்பிற்கு
     நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய்
     நீராட்டம் ஏதுக்கடி.
67
  
சீயு நிணமுந் திரண்ட உடம்பினை
     ஆயுவ ஏதுக்கடி குதம்பாய்
     ஆயுவ ஏதுக்கடி.
68
  
காகம் கழுகு களித்துண்ணும் மேனிக்கு
     வாகனம் ஏதுக்கடி குதம்பாய்
     வாகனம் ஏதுக்கடி.
69
  
கோவணத் தோடே கொளுத்தும் உடலுக்குப்
     பூவணை ஏதுக்கடி குதம்பாய்
     பூவணை ஏதுக்கடி.
70
  
              பரத்தயரைப் பழித்தல்

நெடுவரை போலவே நீண்ட கனதனம்
     நடுவாக வந்ததடி குதம்பாய்
     நடுவாக வந்ததடி.
71
  
கையால் அழைப்பது போல் உனது கண்
     மையால் அழைப்பதென்ன குதம்பாய்
     மையால் அழைப்பதென்ன.
72
  
முதிர்ந்த சுடுகாட்டில் முல்லையை ஒத்தபல்
     உதிர்ந்து கிடக்குமடி குதம்பாய்
     உதிர்ந்து கிடக்குமடி.
73