பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்263


அன்போடு நற்பத்தி ஆதிமேல் வையார்க்குத்
     துன்பாம் நரகமடி குதம்பாய்
     துன்பாம் நரகமடி?
92
  
         பொய்த்தவ ஒழுக்கத்தைப் பழித்தல்

செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு
     எங்காகும் நல்வழியே குதம்பாய்
     எங்காகும் நல்வழியே.
93
  
மாத்திரைக் கோல்கொண்டு மாரீசஞ் செய்வார்க்குச்
     சாத்திரம் ஏதுக்கடி குதம்பாய்
     சாத்திரம் ஏதுக்கடி?
94
  
வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்குப்
     பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய்
     பெண்ணாசை ஏதுக்கடி?
95
  
ஒப்பிலாத் தேவனை உள்ளத்தில் வைத்தோர்க்குக்
     கப்பறை ஏதுக்கடி குதம்பாய்
     கப்பறை ஏதுக்கடி?
96
  
சான்றோர் எனச் சொல்லித் தத்துவம் தேர்ந்தோர்க்கு
     மான்தோல் ஏதுக்கடி குதம்பாய்
     மான்தோல் ஏதுக்கடி.
97
  
நாடி மனத்தினை நாதன்பால் வைத்தோர்க்குத்
     தாடிசடை ஏனோ குதம்பாய்
     தாடிசடை ஏனோ?
98
  
நாதற்கு உறவாகி நற்தவம் சார்ந்தோர்க்குப்
     பாதக் குறடுமுண்டோ குதம்பாய்
     பாதக் குறடுமுண்டோ?
99
  
தபநிலை கண்டாதி தன்வழி பட்டோர்க்குச்
     செபமாலை ஏதுக்கடி குதம்பாய்
     செபமாலை ஏதுக்கடி?
100