பங்கொடு பங்கில்லாப் பாழ்வெளி கண்டோர்க்கு லங்கோ டேதுக்கடி குதம்பாய் லங்கோ டேதுக்கடி? | 101 |
| | |
நிலையாப்பொருள் தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு நாடி வருவதுண்டோ? குதம்பாய் நாடி வருவதுண்டோ? | 102 |
| | |
போம்போது தேடும் பொருளில் அணுவேனும் சாம்போது தான்வருமோ? குதம்பாய் சாம்போது தான்வருமோ? | 103 |
| | |
காசினிமுற்றாயுன் கைவச மாயினும் தூசேனும் பின்வருமோ? குதம்பாய் தூசேனும் பின்வருமோ? | 104 |
| | |
உற்றார் உறவின ஊரார் பிறந்தவர் பெற்றார்துணை யாவரோ? குதம்பாய் பெற்றார்துணை யாவரோ? | 105 |
| | |
மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப் பொய்ப்பணி ஏதுக்கடி? குதம்பாய் பொய்ப்பணி ஏதுக்கடி? | 106 |
| | |
விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு மண்ணாசை ஏதுக்கடி? குதம்பாய் மண்ணாசை ஏதுக்கடி? | 107 |
| | |
சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள் யானையும் நில்லாதடி! குதம்பாய் யானையும் நில்லாதடி! | 108 |
| | |
செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம் தங்காது அழியுமடி! குதம்பாய் தங்காது அழியுமடி! | 109 |