பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்265


கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்
     கூடவே வாராதடி! கும்பாய்
     கூடவே வாராதடி!
110
  
           தன்னோடு செல்பவை

நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்
     செல்வன் நிச்சயமே குதம்பாய்
     செல்வன நிச்சயமே.
111
  
செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும்
     எய்த வருவனவே குதம்பாய்
     எய்த வருவனவே.
112
  
முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய
     பத்தியும் பின்வருமே குதம்பாய்
     பத்தியும் பின்வருமே.
113
  
            ஆசையை ஒழித்தல்

இச்சைப் பிறப்பினை எய்விக்கு என்றது
     நிச்சய மாகுமடி குதம்பாய்
     நிச்சய மாகுமடி.
114
  
வல்லமை யாகவே வாஞ்சை ஒழித்திட்டால்
     நல்ல துறவாமடி குதம்பாய்
     நல்ல துறவாமடி.
115
  
ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டென்ற
     ஓசையைக் கேட்டிலையோ குதம்பாய்
     ஓசையைக் கேட்டிலையோ?
116
  
தேக்கிய ஆசையைச் சீயென்று ஒறுத்தோரே
     பாக்கிய வான்களடி குதம்பாய்
     பாக்கிய வான்களடி.
117
  
இன்பங்கள் எய்திட விச்சை உறாதார்க்குத்
     துன்பங்கள் உண்டாமடி குதம்பாய்
     துன்பங்கள் உண்டாமடி.
118