பக்கம் எண் :

266சித்தர் பாடல்கள்

துறவிகள் ஆளாசை துறந்து விடுவரேல்
     பிறவிகள் இல்லையடி குதம்பாய்
     பிறவிகள் இல்லையடி.
119
  
              தவநிலை கூறல்

கொல்லா விரதம் குளிர்பசி நீக்குதல்
     நல்ல விரதமடி குதம்பாய்
     நல்ல விரதமடி.
120
  
தவநிலை ஒன்றனைச் சாராத மாந்தர்கள்
     அவநிலை யாவாரடி குதம்பாய்
     அவநிலை யாவாரடி.
121
  
தவமதை எந்நாளுஞ் சாதிக்க வல்லார்க்குச்
     சிவமது கைவசமே குதம்பாய்
     சிவமது கைவசமே.
122
  
காமனை வென்று கடுந்தவஞ் செய்வோர்க்கு
     ஏமன் பயப்படுவான் குதம்பாய்
     ஏமன் பயப்படுவான்.
123
  
யோகந் தான்வேண்டி உறுதிகொள் யோகிக்கு
     மோகந்தான் இல்லையடி குதம்பாய்
     மோகந்தான் இல்லையடி.
124
  
காலங்கள் கண்டு கடிந்த துறவோர்க்குக்
     கோலங்கள் உண்டாமடி குதம்பாய்
     கோலங்கள் உண்டாமடி.
125
  
ஐம்புலன் வென்றே அனைத்தும் துறந்தோர்கள்
     சம்புவைக் காண்பாரடி குதம்பாய்
     சம்புவைக் காண்பாரடி.
126
  
பொய்மை வெறுத்திட்டு மெய்யை விரும்பினோர்
     மெய்யவர் ஆவாரடி குதம்பாய்
     மெய்யவர் ஆவாரடி.
127