பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்267


யான் என்ன தென்னும் இருவகைப் பற்றற்றோன்
     வானவன் ஆவானடி குதம்பாய்
     வானவன் ஆவானடி.
128
  
அகம்புறம் ஆனபற் றற்றமெய்ஞ் ஞானிக்கு
     நகுபிறப்பு இல்லையடி குதம்பாய்
     நகுபிறப்பு இல்லையடி.
129
  
பற்றறில் துன்பமும் பற்றறும் இன்பமும்
     முற்றாக எய்துமடி குதம்பாய்
     முற்றாக எய்துமடி.
130
  
               அறிவு விளக்கம்

பொய்ஞ்ஞானம் நீக்கியே பூரணம் சார்தற்கு
     மெய்ஞ்ஞானம் வேண்டுமடி குதம்பாய்
     மெய்ஞ்ஞானம் வேண்டுமடி.
131
  
பிறவியை நீக்கிடப் பேரின்பம் நோக்கிய
     அறிவு பெரிதாமடி குதம்பாய்
     அறிவு பெரிதாமடி.
132
  
தத்துவமாகவே சத்துப்பொருள் கண்டால்
     தத்துவ ஞானமடி குதம்பாய்
     தத்துவ ஞானமடி.
133
  
அண்டத்தைக் கண்டதை ஆக்கினோன் உண்டென்று
     கண்டது அறிவாமடி குதம்பாய்
     கண்டது அறிவாமடி.
134
  
முக்குற்றம் நீக்கமுயலும் மெய்ஞ் ஞானமே
     தக்கமெய்ஞ் ஞானமடி குதம்பாய்
     தக்கமெய்ஞ் ஞானமடி.
135
  
போதம் இதென்றுமெய்ப் போதநிலை காணல்
     போதமது ஆகுமடி குதம்பாய்
     போதமது ஆகுமடி.
136