அருணப் பிரகாசம் அஇண்டமெங்கும் போர்த்ததுபோல் கருணைத் திருவடியில் கலந்துநிற்ப தெக்காலம். | 170 |
| |
பொன்னிற் பலவிதமாம் பூரணமுண் டானாது போல் உன்னிற் பிறந்ததுன்னில் ஒடுங்குவது மெக்காலம். | 171 |
| |
நாயிற் கடைப்பிறப்பாய் நான்பிறந்த துன்பமற வேயிற் கனலொளிபோல் விளங்குவது மெக்காலம். | 172 |
| |
சூரிய காந்தியொளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டதுபோல் ஆரியன் தோற்றத் தருள்பெறுவ தெக்காலம். | 173 |
| |
இரும்பிற் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க் கரும்பிற் சுவைரசத்தைக் கண்டறிவ தெக்காலம். | 174 |
| |
கருக்கொண்ட முட்டைதனை கடலாமை தானினைக்க உருக்கொண்டவாறதுபோல் உனையடைவ தெக்காலம். | 175 |
| |
வீடுவிட்டுப் பாய்ந்து வெளியில் வருவார்போல் கூடுவிட்டுப் பாயுங் குறிப்பறிவ தெக்காலம். | 176 |
| |
கடைந்த வெண்ணை மோரிற் கலவாத வாறதுபோல் உடைந்து தமியேன் உனைக்காண்ப தெக்காலம். | 177 |
| |
இருளை ஒளிவிழுங்கி ஏகவுருக் கொண்டாற்போல் அருளை விழுங்குமிருல் உகன்றுநிற்ப தெக்காலம். | 178 |
| |
மின்னெழுந்து மின்னொடுங்கி விண்ணில் உறைந்தாற்போல் என்னுள்நின்றது என்னுள்ளே யானறிவ தெக்காலம். | 179 |
| |
கண்ட புனற்குடத்திற் கதிரொளிகள் பாய்ந்தாற்போல் கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ தெக்காலம். | 180 |
| |
பூணுகின்ற பொன்னணிந்தாற் பொன்சுமக்குமோ வுடலை காணுகின்ற என்கருத்திற் கண்டறிவ தெக்காலம். | 181 |
| |
செம்பிற் களிம்புபோற் சிவத்தை விழுங்குமிக வெம்பிநின்ற மும்மலத்தை வேறுசெய்வ தெக்காலம். | 182 |
| |
ஆவியுங் காயமும்போல் ஆத்துமத்து நின்றதனைப் பாவி யறிந்துமனம் பற்றிநிற்ப தெக்காலம். | 183 |