ஊமைக் கனாக்கண் டுரைக்கறியா இன்பமதை நாமறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம். | 184 |
| |
சாகாச் சிவனடியைத் தப்பாதார் எப்போதும் போகா உடலகன்று போவதென்ப தெக்காலம். | 185 |
| |
நிட்டை தனைவிட்டு நினைவறிவு தப்பவிட்டு வெட்ட வெளியில் விரவிநிற்ப தெக்காலம். | 186 |
| |
வெட்டவெளி தன்னில் விளைந்த வெம்பாதத்தை திட்டமுடன் கண்டு தெளிவதினி யெக்காலம். | 187 |
| |
எங்கும் பரவடிவாய் என்வடிவு நின்வடிவாய்க் கங்குல்பக லின்றியுனைக் கண்டிருப்ப தெக்காலம். | 188 |
| |
உண்டதுவும் மாதருடன் கூடிச் சேர்ந்தின்பங் கண்டதுவு நீயெனவே கண்டு கொள்வ தெக்காலம். | 189 |
| |
ஈமென்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும் ஓமென்று சொன்னதுவும் உற்றறிவ தெக்காலம். | 190 |
| |
சத்தம் பிறந்தவிடந் தன்மயமாய் நின்றவிடஞ் சித்தம் பிறந்தவிடந் தேர்ந்தறிவ தெக்காலம். | 191 |
| |
போக்கு வரவும் புறம்புள்ளு மாகிநின்றும் தாக்கு மொரு பொருளைச் சந்திப்ப தெக்காலம். | 192 |
| |
நானெனவு நீயெனவு நாமிரண்டு மற்றொன்றும் நீயெனவே சிந்தைதனி நேற்படுவ தெக்காலம். | 193 |
| |
அறிவையறி வாலறிந்தே அறிவும் அறிவுதனில் பிறிவுபட நில்லாமல் பிடிப்பதினி யெக்காலம். | 194 |
| |
நீடும் புவனமெல்லாம் நிறைந்துசிந் தூரமதாய் ஆடும் திருக்கூத்தை அறிவதினி யெக்காலம். | 195 |
| |
தித்தியென்ற கூத்தும் திருச்சிலம்பி னோசைகளும் பத்தியுடனே கேட்டுப் பணிவதினி யெக்காலம். | 196 |
| |
நயனத் திடைவெளிபோய் நண்ணும் பரவெளியில் சயனத் திருந்து தலைப்படுவ தெக்காலம். | 197 |