பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்351


 வலம்புரி யச்சங்க மூது மடிமேலே
     வாசியைப் பாரடி வாலைப் பெண்ணே!
  
28.வாசிப் பழக்க மறியவே ணுமற்று
     மண்டல வீடுகள் கட்டவேணும்;
நாசி வழிக்கொண்டு யோகமம் வாசியும்
     நாட்டத்தைப் பாரடி வாலைப் பெண்ணே!
  
29.முச்சுட ரான விளக்கினுள் ளேமூல
     மண்டல வாசி வழக்கத்திலே
எச்சுடராகி யந்தச் சுடர்வாலை
     இவள் விட வேறில்லை வாலைப் பெண்ணே!
  
30.சூடாமல் வாலை யிருக்கிற தும்பரி
     சித்த சிவனுக்குள் ளானதால்
வீடாமல் வாசிப் பழக்கத்தைப் பாருநாம்
     மேல்வீடு காணலாம் வாலைப் பெண்ணே!
  
31.மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்
     விளக்கில் நின்றவன் வாணியடி
தாய்வீடு கண்டவன் ஞானியடிபரி
     தாண்டிக் கொண்டான்பட் டாணியடி.
  
32.அத்தியி லேகரம் பத்தியி லேமனம்
     புத்தியி லேநடு மத்தியிலே
நெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன்
     நிலைமையைப் பாரடி வாலைப் பெண்ணே!
  
33.அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்
     வழுத்தி னேன்ஞானப் பழத்திலே
கழுத்தி லேமயேஸ் வரனு முண்டுகண்
     கண்டு பாரடி வாலைப் பெண்ணே!
  
34.அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சிய ரேநிதம்
     கொஞ்சி விளையாடும் வஞ்சியரே!
நெஞ்சிலே ருத்திரன் சூழிருப் பானவன்
     நேருட னாமடி வாலைப் பெண்ணே!