எண்ணேது நினைவேதிங் கறிவு மேது? ஏகமாய்க் கலந்துத்தி யிடத்தைக் காணே. | 30 |
| |
உத்திகொண்டு ஞானநூல் பார்த்துப் பார்த்தே உலகத்தோர் ஞானமெல்லாம் வந்த தென்று பத்திகொண்டே அலைவார்கள் விண்ணைப் பாரார் பாழான மனத்தையங்கே நிறுத்த மாட்டார் முத்திகண்ட விடமெங்கே யென்று காணார் மூச்சற்று நின்றிடத்தை நோக்கிப் பாரார் சித்திகண்டால் சித்திகொண்டு செய்ய மாட்டார் சேர்ந்துமதா யிருக்கறியார் திருடர் தானே. | 31 |
| |
தானென்ற ஆணவத்தை நீக்க மாட்டார் சண்டாள கோபத்தைத் தள்ள மாட்டார் ஊனென்ற சுகபோக மொழிக்க மாட்டார் உற்றுநின்ற சையோகம் விடுக்க மாட்டார் பானென்ற ஞானவெள்ள முண்ண மாட்டார் பதறாமல் மவுனத்தே யிருக்க மாட்டார் வானென்ற பொருளென்ன எளிதோ மைந்தா! மகத்தான மனமடங்க எய்யுங் காணே. | 32 |
| |
காணிந்த வுலகத்தில் மாயக் கூத்தும் கண்மூக்குச் செவியோடிந் திரியக் கூத்தும் பூணந்த வாசியினால் வறுமைக் கூத்தும் புகழான செனனமொடு மானக் கூத்தும் ஆணிந்த அண்டமெல்லாம் படைத்த கூத்தும் ஆங்காரம் மனம்புத்தி யான கூத்தும் தோணிந்தப் படிபடைத்த பாமே யையா! சொற்பெரிய பூரணமே யென்று கூவே. | 33 |
| |
கூவையிலே யாத்தாளைத் தொழுது கூவக் குறையாத கருணையினால் திரும்பிப் பார்த்துத் தாவையிலே மதலையைத்தான் தாய்தான் சென்று சார்வாக எடுத்துப்போ லுன்னை மைந்தா! தேவையிலே யெடுத்தணைத்தே யுயிரை வைப்பாள் செகசால மாடுகிற திருட்டுத் தாய்தான் | |