பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்407


பாவையிலே மனஞ்சென்று பரவா விட்டால்
     பாராது போலிருப்பாள் பாரு பாரே.
34
  
பாரப்பா செகமனைத்தும் அண்ட மெல்லாம்
     பாங்கான சூழ்ச்சியில்வைத் திருந்த கன்னி
நேரப்பா இவளைவிட்டு யோகம் பார்த்தேன்
     நேராக அண்டத்தில் ஞானம் பார்த்தேன்
சேரப்பா சுத்தவிழல் மனமோ பேயாம்
     செகசாலக் கூத்தைவிட்டுத் தெளிய மாட்டார்
ஆரப்பா அவளை விட்டு ஞானங் கண்டோர்
     அலைக்கழிக்கு மாசையென்ற பாம்பு தானே.
35
  
பாம்பையல்லோ ஆபரணம் பூண்ட ஈசன்
     பரிவாக மதியோடு கொன்றை சூடிப்
பாம்பையல்லோ முந்நூலாய்ப் போட்ட கூத்தன்
     பாங்கான கரியுரித்த பாணி பாணி
பாம்பையல்லோ கங்கணமாய்த் தரித்துக் கொண்டு
     பரியுழுவைத் தோலுடுத்துப் பாதந் தூக்கிப்
பாம்பையல்லோ மனைக்குமோ திரமாய்ப் போட்டு
     பாரென்றே அகண்டத்தி லாடி னாரே.
36
  
ஆடினதோர் கூத்தெல்லா மாத்தாள் மெச்சி
     அண்டையிலே யழைத்தானை யிருத்திக் கொண்டாள்
நாடினதோ ரவளருகி லரனு மெய்வான்
     நாமறியோ மவனவளு மொன்றே யொன்றே
ஊடினதோ ரிடமெங்கே? ஒலிகேட் பெங்கே?
     ஒன்றாகக் காணுகிற நடன மெங்கே?
கூடினதோ ரகண்டத்தின் சோதி யெங்கே?
     கூசாமல் மவுனத்திற் கூடிக் காணே.
37
  
            மெய்ஞ்ஞான குரு

காணப்பா மகாரவரை நாத வோசை
     கன்னிக்குப் பீடமடா மவுன ஞானம்
ஊணப்பா வூணப்பா நாதத் தோடே
     ஒருமுனையா யொருவழியா யொன்றா யோடும்