பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்417


வானென்ற வெளியோடறு தலமுங் காட்டி
     வாய்மூடி னாதிக்க வகையும் காட்டி
ஊனென்ற வுடம்பைவிட்டுக் கேசரியுங் காட்டி
     ஊமைநின்ற விடங்காட்டி யுரைக்கப் பண்ணிக்
கோனென்ற குருவெனும் வாய் பேசலாமோ
     குறும்பரே குருசொல்ல விரண்டு மாமே.
74
  
ஆமிந்த வுலகத்தோர் ஞான வீதி
     அறிந்தேறிக் கூடுவதும் அரிது மெத்த
ஓமிந்தக் குண்டலியைத் தொட்ட ரற்ற
     ஊதுவது கடினமெத்த யோக மார்க்கம்
வாமிந்த வாமத்தே நின்று கொண்டு
     மகத்தான பானமுண்ண வாய்க்கும் ரண்டும்
சோமிந்தச் சடைவைத்துச் சின்மயம் காட்டும்
     சொற்பெரிய பூரணந்தான் சொன்ன வாறே.
75
  
வாறான குருவினுடை வாழ்க்கை கேளு
     மகத்தான சடையின் மேல் மதியுஞ் சூட்டித்
தாறான நெற்றியிலே தீயை வைத்துச்
     சர்ப்பமல்லோ ஆபரண மாகப் பூண்டு
வீறான கரித்துகிலை மேலே போர்த்து
     விளக்கியதோர் புலித்தோலை யிடையிற் கட்டிக்
கூறான சுடுகாட்டிற் குடியு மாகிக்
     கொள்கின்றார் பலியெடுக்கக் கொள்கின் றாரே.
76
  
பலியெடுத்த குருவினிட வாம பாகம்
     பகிர்ந்துநின்ற என் தாயின் பரிசு கேளு;
பொலியெடுத்த அட்டமா சித்திநிற்கப்
     புகழ்பெரிய ரத்னவகை யாரம் பூண்டு
நலிவில்லா யோகாப்பி யாசஞ் செய்து
     நண்ணுமிரு பதச்சேவை காண்ப தற்கே
ஒலியெடுத்த நவகோடி தேவர் சித்தர்
     ஒன்றாகக் கணநாதர் போற்று வாரே.
77
  
அறிந்துகொள் என்தாயே துரைப்பெண் ணப்பா!
     அப்பனோ எருதேறும் ஏழை யேழை