பூணப்பா இந்திரியம் பெண்ணா லாச்சு; புகழ்பெரிய வாசனையும் பெண்ணா லாச்சு; தோணப்பா மனம்புத்தி யாங்கா ரத்தில் சொக்கிச்சுப் பெண்ணாலே சூட்டிப் பாரு; ஊணப்பா வூணப்பா வுரைக்கச் சொன்னேன்; உலகத்திற் றிரியாதே விண்ணி லாடே. | 90 |
| | |
ஆடையிலே விண்ணுக்குட் சித்தர் கோடி அந்தந்த மலைகளினால் தாக்க வோடி ஊடையிலே யண்டத்தில் முனிவர் கோடி உற்றுநின்ற பதமளவும் ரிடிகள் கோடி தேடையிலே சதாநித்தம் வேதம் பாரு சேர்ந்துநின்ற வோசையிலே தெளியச் சொல்வார் நாடையிலே யெந்நேரம் மவுனம் நாடு நரகமாம் வாசனைதான் நன்றாய்க் கேளு. | 91 |
| | |
கேளப்பா இதைவிட்டே யுலக ஞானி கேட்டதெல்லாஞ் சொல்லுகிறேன் மக்காள் மக்காள்! நாளப்பா செகமெல்லாஞ் சாங்க மென்பான் நலமான நூல்பாரான் தீட்சை யாவான் காளப்பா மவுனமென்பான் விண்ணைப் பார்ப்பான் காதகத்தை விட்டுச்சீ வனத்திற் செல்வான் நாளப்பா தினந்தோறுந் தர்க்கம் பேசி நலமான பெண்ணோடு மயங்கு வானே. | 92 |
| | |
மயங்குவான் பொன்தேடப் புரட்டும் பேசி மகத்தான ஞானமெல்லாம் வந்ததென்பான்; தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்; சாதகமா யோகத்திற் சார்ந்தே னென்பான்; தியங்குவான் நோய்வரிற்பூ ரணமே யென்பான்; செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து; முயங்குவான் சமாதிவிட் டேனையோ வென்பான் மூடமொற்ற ஞானமெல்லா முலகிற் பாரே. | 93 |
| | |
பாரப்பா சரீரமிது சமாதிக் காக! பாழான தூலமிது வென்பார் கோடி | |