காசிபோய் வந்தாலும் என்ன? பெரிய கனக தண்டிகையேறித் திரிந்தாலும் என்ன? வாசியைத் தெரிந்தாலும் என்ன? நாளும் மகராசன் என்றுபேர் பெற்றாலும் என்ன? | 4 |
| |
புராணம் படித்தாலும் என்ன? இந்தப் பூலோகம் தன்னில் மறைந்திருந்து என்ன? திராசு நிலையாய் இருந்து என்ன? தினம் சிவசிவா என்றே செபித்தாலும் என்ன? | 5 |
| |
வித்தைகள் பலபடித்து என்ன? நீ மென்மேலுஞ் சாத்திரம் கற்றாலும் என்ன? சித்துகள் தெரிந்தாலும் என்ன? நாளும் சிறப்பாக வார்த்தை உரைத்தாலும் என்ன? | 6 |
| |
பெண்டாட்டி பிள்ளை இருந்து என்ன? முதிர்ந்த பெரியோர்கள் பாதத்தைப் பூசித்தும் என்ன? துண்டாகப் போயிருந் தென்ன? நீ துலையாத கற்கோட்டை கட்டியிருந்து என்ன? | 7 |
| |
மாடிமேல் வீடிருந்து என்ன? இந்த வையகத் தோர்மெய்க்க வாழ்ந்தாலும் என்ன? கூடிக் குலாவி இருந்த தென்ன? கையெடுத்துக் கும்பிட்டுக் கூத்தாடித் திரிந்தாலும் என்ன? | 8 |
| |
தாய்தந்தை துணையிருந்து என்ன? உற்ற சனங்களும் உபகார மாய் இருந்தென்ன? நாய்போல் அலைந்தாலும் என்ன? வரும் நமனுக்குத் தப்பி ஒழிந்தாலும் என்ன? | 9 |
| |
சரியை கடந்திடவும் வேணும் இந்தச் சகத்தினுட மாயை ஒழித்திடவும் வேணும். கிரியையைப் பார்த்தறிய வேணும் மனவாக்குக் கெட்டாத சொரூபத்தைத் தெரிந்திடவேணும் | 10 |
| |
யோகந் தெரிந்திட வேணும், உனக் குண்டிமுதல் ஆனதைச் சுருக்கிடவேணும், | |