பக்கம் எண் :

518சித்தர் பாடல்கள்

பாகமது தெரியவே வேணும்,                         குரு
பாதம் அதை மறவாமல் இருந்திடவேணும்.
11
  
கொலைகளவு நீக்கிவிட வேணும்                    உலகில்
கொடியோன் எனும்பேரைப் போக்கிடவேணும்
புலைகளைத் தொலைத்து விடவேணும்                இன்று
பொல்லாத மாயையை விலக்கிடவேணும்.
12
  
சோதியைக் கண்டு அறிய வேணும்                   வேதச்
சுடரெனும் தீபத்தைப் பார்த்தறிய வேணும்
ஆதிம்பிர் மந்தெரிய வேணும்                       அதை
அன்புடன் சாத்திரத் தாற்தெரிய வேணும்.
13
  
ஞானநிலை தெரியவே வேணும்                      இதில்
நால்வேத உண்மை தெரிந்திட வேணும்
மோன நிலைதெரியவே வேணும்                     யோக
முடிவான வத்துவை முன்தெரிய வேணும்.
14
  
அட்ட கரு மம்தெரிய வேணும்                       அதற்
காதார மானஆலை தெரிய வேணும்
திட்டமாய் வாசிநிலை வேணும்                         இத
தெரிந்துகொண் டாற்சித்தன் ஆகவே வேணும்
15
  
பந்தங் கடந்தவனே சித்தன்                       பாரிலே
பஞ்சமா பாதகத்தை விட்டோனே பத்தன்
இந்தவிதந் தெரிந்தவனே சித்தன்                    அதில்
என்நிலைமை கண்டவனே சீவ முத்தன்
16
  

ஆனந்தக் களிப்பு

பிர்ம சொரூபத்தை                      நாடு     உன்
     கர்ம வினையோட வழிதனைத்       தேடு
மர்மந் தெரிவிக்கும்                      வீடு      கண்டு
     தர்ம நெறிமுறைதன்னில்நீ            கூடு.

1
  
ஆதி பரம்பொருளைப்                  போற்றி    என்தன்
     ஆத்தாளின் பாதத்தை மனதினி      லேற்றி