பக்கம் எண் :

540சித்தர் பாடல்கள்

மனம் என்னுங் கல்லணையை வைத்திறுக்கி வாய்ந்த
சினமென்னும் அங்கவடி சேர்த்துக்                 கனமான

47
  
நாகபந்தஞ் சாரி நடைதுலுக்குத் தூவான
மாகமுற விட்டுள் ளடக்கியே                       சோகப்

48
  
புரியட்ட காயப் பொருப்பைத் தகர்த்துச்
சரியுட்ட ஐம்பொறியைத் தாண்டித்                துரியத்தில்

49
  
ஓடிவிந்து நாதமெனும் உட்கோட்டை யும்கூத்து
வாடியிடும் நாடி வரம்பு அழித்து                 ஆடியிடும்

50
  
தொண்டுபுரி அன்பர் தொடநரகில் வீழாமல்
மண்டுசினம் கொண்டெழுந்த வாசியான்        கண்டுதொழும்

51
  
தன்னாணை தானே தனக்காணை யாவதன்றிப்
பின்னாணை இல்லாத பெற்றியான்                எந்நாளும்

52
  
மாறாத கீர்த்திமது மாலையான் வாய்திறந்து
சீறாத மோனச் சிவயோகி                         நேராக

53
  
ஆண்டகுரு சிற்றம் பலவன் அடிஅருளும்
வேண்டி வளர்த்த இருபதத்தான்                 பூண்டசிவ

54
  
வேடத்தான் ஓங்கி விளங்கும் செழுங்கமல
பீடத்தான் ஞானப் பிரகாசன்                     ஆடில்

55
  
பரியான் உரியான் பசியான் பொசியான்
பெரியான் அரியான்பேர் இல்லான்                  துரியா

56
  
தீதம் கடந்து திகழம் பரங்கடந்து
போதம் கடந்துநின்ற பொற்பதத்தான்                 சீதம்

57
  
கருணை ஆனந்தமுனி கண்டுதொழ வந்த
வருணன் ஆனந்த மழைமேகம்                    அருணப்

58
  
பிரகாசம் கொண்டுநின்ற பேரொளிபோல் மாயைப்
பிரகாசம் மாற்றும் பெருமையான்                   இறவாத

59
  
மெய்ப்பொருளைக் காட்டி விரும்பும் அடியாரைக்
கைபொருளாய்க் கொண்ட கருணையான்            துய்க்கும்

60