29. கடேந்திர நாதர் என்ற விளையாட்டுச் சித்தர் பாடல் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே விளையாட்டாய் எடுத்துக்கொள்ள வேண்டுமேயல்லாது எதனையும் தீவிரமாய் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறும் இந்த விளையாட்டுச் சித்தரின் இயற்பெயர் கடேந்திர நாதர் என்பதாகும். “நானென்று சொல்வதும் விளையாட்டே - இந்த நானிலத் திருப்பதுவும் விளையாட்டே” “தாய் தந்தை கூடுவதும் விளையாட்டே” “பெற்ற பிள்ளை யென்றதுவும் விளையாட்டே - தந்தை பேரிட்ட ழைத்ததுவும் விளையாட்டே” “மாடிமனை வீடுவாசல் விளையாட்டே - என்றன் மனைவிமக்க ளென்பதுவும் விளையாட்டே” “கூடுவிட்டுப் போகும் உயிர் விளையாட்டே!” “பிணமா யிருப்பதுவும் விளையாட்டே - அதைப் பெற்றோர் கண்டு அழுவதுவும் விளையாட்டே” செத்தோர்க்கு அழுவதுவும் விளையாட்டே - சுடலை சேரும்வரை யழுவதுவும் விளையாட்டே! இப்படி வாழ்க்கையில் எல்லா நிலைகளையும் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளும் இந்த விளையாட்டுச் |