பக்கம் எண் :

564சித்தர் பாடல்கள்

மெய்ப்பொருள்  அனைத்தையும்  விளக்க  முற்படுகின்றார். மூன்றாவது 17ம்
பாடல்  தொகுதியில்  வாதக்குருடு  விபரங்களையும்,  சுண்ணம்  முடிக்கும்
விபரங்களையும், அதன் சூட்சங்களையும் விவரிக்கின்றார்.

    பாடல் முழுவதும் கிறுகிறுப்புதான். படித்துப் பார்த்தால் உண்மை நிலை
விளங்கும்.

கண்ணிகள்

ஆதிசிவ மானகுரு விளையாட்டை - யான்
     அறிந்துரைக்க வல்லவனோ விளையாட்டை
சோதிமய மானசத்தி யென்னாத்தாள் - சுய
     சொரூபத் தடங்கிநின்ற விளையாட்டை

1
  
பார்தனி லுள்ளவர்க்கு விளையாட்டாய் - ஞானம்
     பற்றும்வழி யின்னதெனச் சொன்னதினால்
சீர்பெறுஞ் சித்தர்களு மென்னைவினை - யாட்டுச்
     சித்தனென்றே அழைத்தார்க ளிவ்வுலகில்.
2
  
இகபர மிரண்டுக்குஞ் சரியாகும் - இதை
     இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி - முன்பு
     சாற்றினா ரெந்தனுக்கீ துண்மையுடன்
3
  
நானென்று சொல்வதும் விளையாட்டே - இந்த
     நானிலத் திருப்பதுவும் விளையாட்டே
தானென் றறிவதுவும் விளையாட்டே - பெற்ற
     தாயென் றுரைப்பதுவும் விளையாட்டே.
4
  
தாய்தந்தை கூடுவதும் விளையாட்டே - பூவிற்
     தநயனாய் வந்ததுவும் விளையாட்டே
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே - பத்து
     வயது தெரிந்ததுவும் விளையாட்டே.
5
  
பெற்றபிள்ளை என்றதுவும் விளையாட்டே - தந்தை
     பேரிட் டழைத்ததுவும் விளையாட்டே
மற்றதை யுணர்வதுவும் விளையாட்டே - இந்த
     வையகத் திருப்பதுவும் விளையாட்டே.
6