அட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின் அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே. | 395 |
| | |
கோயிலும் குளங்களும் குறியினில் குருக்களாய், மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர் ஆயனை அரனையும் அறிந்துணர்ந்து கொள்விரேல் தாயினும் தகப்பனோடு தானமர்ந்தது ஒக்குமே. | 396 |
| | |
கோயிலெங்கும் ஒன்றலோ குளங்கள் நீர்கள் ஒன்றலோ தேயுவாயு ஒன்றலோ சிவனுமங்கே ஒன்றலோ ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துவாரது ஒன்றலோ காயம் ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே. | 397 |
| | |
காதுகண்கள் மூக்குவாய் கலந்துவாரது ஒன்றலோ சோதியிட் டெடுத்ததும் சுகங்களஞ்சும் ஒன்றலோ ஓதிவைத்த சாத்திரம் உதித்துவாரது ஒன்றலோ நாதவீடறிந்த பேர்கள் நாதராவர் காணுமே. | 398 |
| | |
அவ்வுதித்த வட்சரத்தின் உட்கலந்த அட்சரம் சவ்வுதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால் மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள் உவ்வுதித்தது அவ்வுமாய் உருத்தரித்த உண்மையே. | 399 |
| | |
அகார மென்னும் அக்கரத்தில் அக்கர மொழிந்ததோ அகாரமென்னும் அக்கரத்தி அவ்வுவந்து உதித்ததோ உகாரமும் அகாரமும் ஒன்றிநன்று நின்றதோ விகாரமற்ற ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. | 400 |
| | |
சத்தியாவது ன்னுடல் தயங்குசீவன் உட்சிவம் பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்ற தில்லையே சுத்தியைந்து கூடமொன்று சொல்லிறந்ததோர் வெளி சத்திசிவமு மாகிநின்று தண்மையாவது உண்மையே. | 401 |
| | |
சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில் மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய் உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே. | 402 |