பக்கம் எண் :

74சித்தர் பாடல்கள்

அட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின்
அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே.
395
  
கோயிலும் குளங்களும் குறியினில் குருக்களாய்,
மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்
ஆயனை அரனையும் அறிந்துணர்ந்து கொள்விரேல்
தாயினும் தகப்பனோடு தானமர்ந்தது ஒக்குமே.
396
  
கோயிலெங்கும் ஒன்றலோ குளங்கள் நீர்கள் ஒன்றலோ
தேயுவாயு ஒன்றலோ சிவனுமங்கே ஒன்றலோ
ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துவாரது ஒன்றலோ
காயம் ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே.
397
  
காதுகண்கள் மூக்குவாய் கலந்துவாரது ஒன்றலோ
சோதியிட் டெடுத்ததும் சுகங்களஞ்சும் ஒன்றலோ
ஓதிவைத்த சாத்திரம் உதித்துவாரது ஒன்றலோ
நாதவீடறிந்த பேர்கள் நாதராவர் காணுமே.
398
  
அவ்வுதித்த வட்சரத்தின் உட்கலந்த அட்சரம்
சவ்வுதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால்
மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்
உவ்வுதித்தது அவ்வுமாய் உருத்தரித்த உண்மையே.
399
  
அகார மென்னும் அக்கரத்தில் அக்கர மொழிந்ததோ
அகாரமென்னும் அக்கரத்தி அவ்வுவந்து உதித்ததோ
உகாரமும் அகாரமும் ஒன்றிநன்று நின்றதோ
விகாரமற்ற ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.
400
  
சத்தியாவது ன்னுடல் தயங்குசீவன் உட்சிவம்
பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்ற தில்லையே
சுத்தியைந்து கூடமொன்று சொல்லிறந்ததோர் வெளி
சத்திசிவமு மாகிநின்று தண்மையாவது உண்மையே.
401
  
சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே
முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே.
402