அக்கரம் அனாதியல்ல ஆத்துமா அனாதியல்ல புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியல்ல தக்கமிக்க நூல்களும் சாஸ்திரம் அனாதியல்ல ஒக்க நின் றுடன் கலந்த உண்மைகாண் அனாதியே. | 403 |
| | |
மென்மையாகி நின்றதேது விட்டுநின்று தொட்டதேது உண்மையாக நீயுரைக்க, வேணுமெங்கள் உத்தமா பெண்மையாகி நின்றதொன்று விட்டுநின்ற தொட்டதை உண்மையாய் உரைக்க முத்தி உட்கலந் திருந்ததே. | 404 |
| | |
அடக்கினால் அடங்குமோ அண்டம் அஞ் செழுத்துளே உடக்கினால் எடுத்தகாயம் உண்மையென்று உணர்ந்துநீ சடக்கில்ஆறு வேதமும் தரிக்கஓதி லாமையால் விடக்குநாயு மாயவோதி வேறு வேறு பேசுமோ. | 405 |
| | |
உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும் தண்மையான காயமும் தரித்தரூபம் ஆனதும் வெண்மையாகி நீறியே விளைந்து நின்ற தானதும் உண்மையான ஞானிகள் விரித்துரைக்க வேண்டுமே. | 406 |
| | |
எள்ளகத்தில் எண்ணெய்போல வெங்குமாகி எம்பிரான் உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடு மூடர்காள் கொள்ளைநாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லிரேல் வள்ளலாகி நின்றசோதி காணலாகும் மெய்ம்மையே. | 407 |
| | |
வேணுமென்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே தாணுவுண்டு அங்குஎன்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர் தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி உம்முளே காணுமன்றி வேறியாவும் கனாமயக்கம் ஒக்குமே. | 408 |
| | |
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர் உழக்கிலாது நாழியான வாறுபோலும் ஊமைகாள் உழக்குநாலு நாழியான வாறுபோலும் உம்முளே வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள்ஈசன் மன்னுமே. | 409 |
| | |
அத்திறங்க ளுக்குநீ அண்டம்எண் டிசைக்கும் நீ திறத்திறங்க ளுக்குநீ தேடுவார்கள் சிந்தைநீ | |