உறக்கும்நீ உணர்வுநீ உட்கலந்த சோதிநீ மறக்கொணாத நின்கழல் மறப்பினுங் குடிகொளே. | 410 |
| | |
ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் நின்றுநீர் தேடுகின்ற வீணர்காள் தெளிவதொன்றை ஓர்கிலீர் நாடிநாடி உம்முளே நவின்றுநோக்க வல்லிரேல் கூடொணாத தற்பரம் குவிந்துகூட லாகுமே. | 411 |
| | |
சுத்தியைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி சத்தியுஞ் சிவமுமாகி நின்றதன்மை ஓர்கிலீர் சத்தியாவது உம்முடல் தயங்குசீவ னுட்சிவம் பித்தர்காள் அறிந்துகொள் பிரானிருந்த கோலமே. | 412 |
| | |
அகாரமான தம்பலம் மனாதியான தம்பலம் உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம் மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே. | 413 |
| | |
சக்கரம் பறந்ததோடி சக்கரமேல் பலகையாய் செக்கிலாமல் எண்ணெய்போல் சிங்குவாயு தேயுவும் உக்கிலே ஒளிகலந்து யுகங்களுங் கலக்கமாய் புக்கிலே புகுந்தபோது போனவாறது எங்ஙனே. | 414 |
| | |
வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீ அருள் கொள்சீவ ராருடம்பு உடைமையாகத் தேர்வீர்காள் விளங்குஞானம் மேவியே மிக்கோர்சொல்லைக் கேட்பிரேல் களங்கமற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே. | 415 |
| | |
நாலுவேதம் ஓதுகின்ற ஞானமொன்று அறிவிரோ நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய் ஆலமுண்ட கண்டனும் அயனுமந்த மாலுமாய்ச் சாலவுன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே. | 416 |
| | |
சுற்றமென்று சொல்வதுஞ் சுருதிமுடிவில் வைத்திடீர் அத்தன்நித்தம் ஆடியே அமர்ந்திருந்தது எவ்விடம் பத்திமுற்றி அன்பர்கள் பரத்திலொன்று பாழது பித்தரே இதைக்கருதி பேசலாவது எங்ஙனே. | 417 |