எங்ஙனே விளக்கதுக்குள் ஏற்றவாறு நின்றுதான் எங்ஙனே எழுந்தருளி ஈசனேசர் என்பரேல் அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம் சிங்கமண்மி யானை போலத் திரிமலங்கள் அற்றதே. | 428 |
| | |
அற்றவுள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும் மெத்ததீபம் இட்டதிற் பிறவாத பூசை ஏத்தியே நற்றவம் புரிந்துயேக நாதர்பாதம் நாடியே கற்றிருப்பதே சரிதை கண்டுகொள்ளும் உம்முளே. | 429 |
| | |
பார்த்து நின்றது அம்பலம் பரனாடும்அம்பலம் கூத்துநின்றது அம்பலம் கோரமானதுஅம்பலம் வார்த்தையானது அம்பலம் வன்னியானது அம்பலஞ் சீற்றமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே. | 420 |
| | |
சென்று சென்றிடந்தொறும் சிறந்த செம்பொனம்பலம் அன்றுமின்றும் நின்றதோர் அனாதியானது அம்பலம் என்று மென்று மிருப்பதோர் உறுதியான அம்பலம் ஒன்றியொன்றி நின்றதுள் ஒழிந்ததே சிவாயமே. | 421 |
| | |
தந்தைதாய் தமரும்நீ சகலதே வதையும்நீ சிந்தைநீ தெளிவுநீ சித்திமுத்தி தானும்நீ விந்துநீ விளைவுநீ மேலதாய வேதம்நீ எந்தைநீ இறைவநீ என்னையாண்ட ஈசனே. | 422 |
| | |
எப்பிறப்பி லும்பிறந் திருந்தழிந்த ஏழைகாள் இப்பிறப்பி லும்பிறந்து என்னநீறு பூசுறீர் அப்புடன் மலமறுத்து ஆசைநீக்க வல்லிரேல் செப்புநாத ஓசையில் தெளிந்துகாண லாகுமே. | 423 |
| | |
மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்விரோ மந்திரங்க ளும்முளே மதிக்கநீறு மும்முளே மந்திரங்க ளாவது மனத்தினைந் தெழுத்துமே. | 424 |
| | |
எட்டுயோக மானதும் இயங்குகின்ற நாதமும் எட்டுவக்க ரத்துளே உகாரமும் அகாரமும் | |