பக்கம் எண் :

78சித்தர் பாடல்கள்

விட்டலர்ந்த மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய்
அட்டவக்ஷ ரத்துளே அமர்ந்ததே சிவாயமே.
425
  
பிரான்பிரா னென்றுநீர் பினத்துகின்ற மூடரே
பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே
பிரானுமாய் பிரானுமாய் பேருலகு தானுமாய்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல்.
426
  
ஆதியில்லை அந்தமில்லை யானநாலு வேதமில்லை
சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதிகண்டு கொண்டபின் அஞ்செழுத்தும் இல்லையே.
427
  
அம்மையப்பன் அப்பனீர் அமர்ந்தபோது அறிகிலீர்
அம்மையப்பன் ஆனநீர் ஆதியான பாசமே
அம்மையப்பன் நின்னை அன்றி யாருமில்லை யானபின்
அம்மையப்பன் நின்னையன்றி யாருமில்லை யில்லையே.
428
  
நூறுகோடி மந்திரம் நூறுகோடி ஆகமம்
நூறுகோடி நாளிருந்து ஊடாடினாலும் என்பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்திலோர் எழுத்ததாய்
சீரைஓத வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.
429
  
முந்தவோ ரெழுத்துளே முளைத்தெழுந்த செஞ்சுடர்
அந்தவோ ரெழுத்துளே பிறந்துகாய மானதும்
அந்தவோ ரெழுத்துளே ஏகமாகி நின்றதும்
அந்தவோ ரெழுத்தையு மறிந்துணர்ந்து கொள்ளுமே.
430
  
கூட்டமிட்டு நீங்களும் கூடிவேத மோதுறீர்
ஏட்டகத்துள் ஈசனு மிருப்பதென் னெழுத்துளே
நாட்டமிட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே
ஆட்டகத்து ளாடிடும் அம்மையாணை உண்மையே.
431
  
காக்கைமூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம்
நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய்
ஏக்கைநோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்
பார்த்தபார்த்த திக்கெலாம் பரப்பிரம்ம மானதே.
432