கொள்ளொணாது குவிக்கொணாது கோதறக் குலைக்கொணாது அள்ளொணாது அணுகொணாது வாதிமூல மானதைத் தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பணன் வில்லொணாது பொருளையான் விளம்புமாறது எங்ஙனே. | 433 |
| | |
ஓசையுள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர் பூசனைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர் ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே. | 434 |
| | |
ஒட்டுவைத்து கட்டிநீ உபாயமான மந்திரம் கட்டுபட்ட போதிலும் கர்த்தனங்கு வாழுமோ எட்டுமெட்டு மெட்டுளே இயங்குகின்ற வாயுவை வட்டுமிட்ட அவ்விலே வைத்துணர்ந்து பாருமே. | 435 |
| | |
இந்தவூரில் இல்லையென்று எங்குநாடி ஓடுறீர் அந்தவூரில் ஈசனும் அமர்ந்துவாழ்வது எங்ஙனே அந்தமான பொந்திலாரில் மேவிநின்ற நாதனை அந்தமான சீயிலவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே. | 436 |
| | |
புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம் தொக்குசட்சு சிங்குவை யாக்கிராணன் சூழ்த்திடில் அக்குமணி கொன்றை சூடி அம்பலத்துள் ஆடுவார் மிக்கசோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே. | 437 |
| | |
பின்னெழுந்த மாங்கிசத்தை பேதையர்கண் பற்றியே பின்புமாங் கிஷத்தினால் போக மாய்கை பண்ணினால் துன்புறும் வினைகள் தான் சூழ்ந்திடும்பின் என்றலோ அன்பராய் இருந்தபேர்கள் ஆறுநீந்தல் போல்விரே. | 438 |
| | |
விட்டிருந்த தும்முளே விதனமற்று இருக்கிறீர் கட்டிவைத்த வாசல் மூன்று காட்சியான வாசலொன்று கட்டிவைத்த வாசலும் கதவுதாள் திறந்துபோய்த் திட்டமான ஈசனைத் தெளியுமாங் கிஷத்துளே. | 439 |
| | |
ஆகுமாகு மாகுமே அனாதியான அப்பொருள் ஏகர்பாதம் நாடிநாடி ஏத்திநிற்க வல்லிரேல் | |