கருவிலே விழுந்தெழுந்த கன்மவாதனை யெலாம் பருதிமுன் இருளதாயப் பறியும் அங்கி பாருமே. | 455 |
| | |
பாரும்எந்தை ஈசர்வைத்த பண்பிலே இருந்துநீர் சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள் வேரையும் முடியையும் விரைந்துதேடி மாலயன் பாரிடந்து விண்ணிலே பறந்துங்கண்டது இல்லையே. | 456 |
| | |
கண்டிலாது அயன்மாலென்று காட்சியாகச் சொல்கிறீர் மிண்டிலால் அரனுடன் மேவலாய் இருக்குமோ தொண்டுமட்டும் அன்புடன் தொழுதுநோக்க வல்லிரேல் பண்டுமுப் புரமெரித்த பக்திவந்து முற்றுமே. | 457 |
| | |
முற்றுமே அவனொழிந்து முன்பின்ஒன்றும் காண்கிலேன் பற்றிலாத ஒன்றுதன்னை பற்றுநிற்க வல்லது கற்றதாலே ஈசர்பாதம் காணலா யிருக்குமோ பெற்றபேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே. | 458 |
| | |
கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலத்துளே வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும் வீட்டிலே வெளியதாகும் விளங்கவந்து நேரிடும் கூட்டிவன்னி மாருதம் குயத்தைவிட்டு எழுப்புமே. | 459 |
| | |
எழுப்பிமூல நாடியை இதப்படுத்த லாகுமே மழுப்பிலாத சபையைநீர் வலித்துவாங்க வல்லிரேல் கழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில்அப்புறம் அழுத்திஓ ரெழுத்துளே அமைப்பதுண்மை ஐயனே. | 460 |
| | |
அல்லதில்லை யென்று தானாவியும் பொருளுடல் நல்லஈசர் தாளிணைக்கும் நாதனுக்கும் ஈந்திலை என்றும்என்னுள் நேசமும் வாசியை வருந்தினால் தொல்லையாம் வினைவிடென்று தூரதூரம் ஆனதே. | 461 |
| | |
ஆனதே பதியது அற்றதே பசுபாசம் போனதே மலங்களும் புலன்களும் வினைகளும் கானகத்தில் இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே. | 462 |