உலாவும்உவ்வும் மவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும் உலாவிஐம் புலன்களும் ஒருதலத் திருந்திடும் நிலாவும்அங்கு நேசமாகி நின்றமுர்தம் உண்டுதாம் குலாவும்எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே. | 463 |
| | |
கும்பிடும் கருத்துளே குகனைஐங் கரனையும் நம்பியே இடம் வலம் நமஸ்கரித்து நாடிட எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவணைத் தும்பிபோல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே. | 464 |
| | |
நீங்கும்ஐம் புலன்களும் நிறைந்தவல் வினைகளும் ஆங்காரமாம் ஆசையும் அருந்தடர்ந்த பாவமும் ஓங்காரத்தி னுள்ளிருந்த வொன்பதொழிந் தொன்றிலத் தூங்கவீசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே. | 465 |
| | |
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையே அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் நினைக்குள் நானெக்குள் நீ நினைக்குமாறது எங்ஙனே. | 466 |
| | |
கருக்கலந்த காலமே கண்டுநின்ற காரணம் உருக்கலந்த போதலோ உன்னை நானுணர்ந்தது விரிக்கிலென் மறைக்கிலென் வினைக்கிசைந்த போதெலாம் உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ. | 467 |
| | |
ஞானநூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள் ஞானமான சோதியை நாடியுள் அறிகிலீர் ஞானமாகி நின்றதோர் நாதனை அறிந்தபின் ஞானமற்ற தில்லைவேறு நாமுரைத்தது உண்மையே. | 468 |
| | |
கருத்தரிப்ப தற்குமுன் காயம்நின்றது எவ்விடம் உருத்தரிப்ப தற்குமுன் உயிர்ப்புநின்றது எவ்விடம் அருட்பொதிந்த சிந்தையில் மயக்கம்நின்றது எவ்விடம் விருப்புணர்ந்த ஞானிகள் விரித்துரைக்க வேணுமே. | 469 |
| | |
கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும் இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும் | |