பக்கம் எண் :

84சித்தர் பாடல்கள்

மறுவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின்
உருவினைப் பயன்இதென்று உணர்ந்தஞானி சொல்லுமே.
470
  
வாயில்எச்சில் போகவே நீர்குடித்து துப்புவீர்
வாயிருக்க எச்சில் போன வாறதென்னது எவ்விடம்
வாயிலெச்சில் அல்லவோ நீருரைத்த மந்திரம்
நாதனை அறிந்தபோது நாடும்எச்சில் ஏதுசொல்.
471
  
தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள்
தொடக்கிருந்த தெவ்விடம் சுத்தியானது எவ்விடம்
தொடக்கிருந்த வாறறிந்து சுத்திபண்ண வல்லிரேல்
தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்து காணலாகுமே.
472
  
மேதியோடும் ஆவுமே விரும்பியே உணர்ந்திடில்
சாதிபேத மாய்உருத் தரிக்குமாறு போலவே
வேதமோது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே.
473
  
வகைகுலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள்
தொகைக்கு லங்களான நேர்மைநாடியே உணர்ந்தபின்
மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறுமொன்று கண்டிலீர்
நகைத்த நாதன் மன்றுள் நின்ற நந்தினியாரு பேசுமே.
474
  
ஓதும்நாலு வேதமும் உரைத்தசாஸ் திரங்களும்
பூததத் துவங்களும் பொருந்தும்ஆக மங்களும்
சாதிபேத வன்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேத மாகியே பிறந்துழன் றிருந்ததே.
475
  
உறங்கிலென் விழிக்கிலென் உணர்வுசென்றொடுங் கிலென்
திறம்பிலென் திகைக்கிலென் சிலதிசைகள் எட்டிலென்
புறம்புமுள்ளும் எங்ஙணும் பொதிந் திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகள் நினைப்ப தேது மில்லையே.
476
  
அங்கலிங்கம் பூண்டுநீர் அகண்டபூசை செய்கிறீர்
அங்கலிங்கம் பூண்டுநீர் அமர்ந்திருந்த மார்பனே
எங்குமோடி எங்குமெங்கும் ஈடழிந்து மாய்குகிறீர்
செங்கல்செம்பு கல்லெலாம் சிறந்துபார்க்கு மூடரே.
477