திட்டம்தீட்டம் என்றுநீர் தினமுழுகு மூடரே தீட்டமாகி அல்லவோ திரண்டுகாய மானது பூட்டகாயம் உம்முளே புகழுகின்ற பேயரே தீட்டுவந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே. | 478 |
| | |
மூலநாடி தம்முளே முளைத்தெழுந்த வாயுவை நாளுநாளு நம்முளே நடுவிருந்த வல்லிரேல் பாலனாகும் உம்முடன் பறந்து போகலாய்விடும் ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே. | 479 |
| | |
உந்திமேலே நாலுமூன்று ஓம்நமசி வாயமாம் சந்திசந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே முந்தவந்து நம்முளே மூலநாடி ஊடுபோய் அந்திசந்தி அற்றிட அறிந்துணர்ந்து பாருமே. | 480 |
| | |
வன்னிமூன்று தீயினில் வாழுமெங்கள் நாதனும் கன்னியான துள்ளிருக்கக் காதல் கொண்டது எவ்விடம் சென்னிநாலு கையிரண்டு சிந்தையில் இரண்டிலொன்று உன்னியுன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே. | 481 |
| | |
தொண்டு செய்து நீங்களும் சூழவோடி மாள்கிறீர் உண்டுழன்று நும்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர் வண்டுலாவு சோலைசூழ் வாழுமெங்கள் நாதனும் பண்டுபோல நம்முளே பகுத்திருப்பன் ஈசனே. | 482 |
| | |
அரியதோர் நமச்சிவாயம் அதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுகோடி அளவிடாத மந்திரம் தெரியநாலு வேதம்ஆறு சாத்திர புராணமும் தேடுமாறும் அயனுஞ்சர்வ தேவதேவ தேவனே. | 483 |
| | |
பரமுனக்கு எனக்குவேறு பயமுமில்லை பாரையா கரமுனக்கு நித்தமுங் குவித்திடக் கடமையாம் சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே உரமெனக்கு நீயளித்த உண்மையுண்மை உண்மையே. | 484 |
| | |
மூலவட்ட மீதிலே முளைந்தஐந் தெழுத்திலே கோலவட்டம் மூன்றுமாய்க் குளிர்ந்தலர்ந்து நின்ற தீ | |