ஞாலவட்ட மன்றுளே நவின்றஞானி மேலதாய் ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே. | 485 |
| |
என்னகத்தில் என்னை நானெங்கும் ஓடிநாடினேன் என்னகத்தில் என்னையன்றி ஏதுமொன்று கண்டிலேன் வின்னெழும்பி விண்ணகத்தின் மின்னொடுங்கு மாறுபோல் என்னகத்துள் ஈசனோ டியானுமல்ல தில்லையே. | 486 |
| |
நாலுவேதம் ஓதுகின்ற ஞானமொன்று அறிவிரோ நாலுசாமம் ஆகியும் நவின்றஞான போதமாய் ஆலமுண்ட கண்டனும் அயனும் அந்தமாலுமாய்ச் சாலவுன்னி நெஞ்சிலே தரித்ததேசி வாயமே. | 487 |
| |
முச்சதுர மூலமாகி மூன்றதான பேதமாய் அச்சதுரம் உம்முளே அடங்கிவாசி யோகமாம் மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய் உச்சரித்த மந்திரம் ஓம்நமசி வாயமே. | 488 |
| |
மூலமண்ட லத்துளே முச்சதுர மாயமாய் நாலுவாசல் என்விரலில் உடுத்தித்த மந்திரம் கோலியென்றும் ஐந்துமாய்க் குளிர்ந்தலந்து நின்றநீ மேலுமேலு நாடினேன் விழைந்ததே சிவாயமே. | 489 |
| |
இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர் ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கஞானம் எவ்விடம் அடங்குகின்றது எவ்விட மறிந்து பூசை செய்யுமே. | 490 |
| |
புத்தகங்க ளைச்சுமந்து பொய்களைப் பிதற்றுவீர் செத்திடம் பிறந்திடம் தெங்ஙனென்றே அறிகிலீர் அத்தனைய சித்தனை அறிந்துநோக்க வல்லிரேல் உத்தமத்துள் ஆயசோதி உணரும் போக மாகுமே. | 491 |
| |
அருளிலே பிறந்துதித்து மானயரூப மாகியே இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லிரேல் மருள தேதுவன்னியின் மறைந்ததே சிவாயமே. | 492 |