கருக்கலந்த காலமே கண்டிருந்த காரணா உருக்கலந்த சோதியைத் தெளிந்து யானறிந்தபின் தருக்கலந்த சோதியைத் தெளிந்துயா னறிந்தபின் இருக்கிலேன் இறக்கிலேன் இரண்டுமற்று இருந்ததே. | 493 |
| |
தன்மசிந்தை யாமளவும் தவமறியாத் தன்மையாய்க் கன்மசிந்தை வெயிலுழன்று கருத்தமிழ்ந்த கசடரே சென்மசென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை நன்மையாக உம்முளே நயந்துகாண வேண்டுமே. | 494 |
| |
கள்ளவுள்ள மேயிருந்து கடந்தஞானம் ஓதுவீர் கள்ளமுள் ளறுத்தபோது கதியிதன்றிக் காண்கிலீர் உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லிரேல் தெள்ளுஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே. | 495 |
| |
காணவேண்டு மென்று நீர் கடல்மலைகள் ஏறுவீர் ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே வேணுமென்றவ் வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல் தாணுவாக நின்றசீவன் தான்சிவம தாகுமே. | 496 |
| |
அணுவினொடு அகண்டமாய் அளவிலாத சோதியைக் குணம தாகஉம் முளே குறித்து நோக்கின் முத்தியாம் மிணமிணென்று விரலையெண்ணி மீளொணாத மயக்கமாய் துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர். | 497 |
| |
எச்சிலெச்சில் என்றுநீரிடைந்திருக்கும் ஏழைகாள் துச்சிலெச்சில் அல்லவோ தூயகாய மானதும் வைத்தஎச்சில் தேனலோ வண்டினெச்சில் பூவலோ கைச்சுதாவில் வைத்துடன் கறந்தபாலும் எச்சிலே. | 498 |
| |
தீர்த்தலிங்க மூர்த்தியென்று தேடியோடுந் தீதரே தீர்த்தலிங்கம் உள்ளினின்ற சீவனைத் தெளியுமே தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்துகாண வல்லிரேல் தீர்த்தலிங்கம் தானதாய்ச் சிறந்ததே சிவாயமே. | 499 |
| |
ஆடுகொண்டு கூடுசெய்து அமர்ந்திருக்கும் வாறுபோல் தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே | |