பக்கம் எண் :

88சித்தர் பாடல்கள்

நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே
போடுதர்ப்ப பூசையென்ன பூசையென்ன பூசையே.
500
  
என்னைஅற்ப நேரமும் மறக்கிலாத நாதனே
ஏகனே இறைவனே இராசராச ராசனே
உன்னையற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமோ
உனதுநாட்டம் எனதுநாவி லுதவி செய்வீரீசனே.
501
  
எல்லையற்று நின்ற சோதி ஏகமாய் எரிக்கவே
வல்லபூர ணப்பிரகாசர் ஏகபோக மாகியே
நல்லவின்ப மோனசாகரத்திலே அழுத்தியே
நாடொணாத அமிர்தமுண்டு நானழிந்து நின்றநாள்.
503
  
ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை
ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லிரே
ஊனகாயம் ஆளலாம் உலகபாரம் ஆளலாம்
வானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே.
504
  
நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து
கத்தியே கதறியே கண்கள் மூடி என்பயன்
எத்தனைபேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ
வத்தனுக் கிதேற்குமோ அறிவிலாத மாந்தரே.
505
  
எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை
மட்டதாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல்
கட்டமான பிறவியென் கருங்கடல் கடக்கலாம்
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே.
506
  
உண்மையான மந்திர மொளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்துரூபம் ஆகியே
வெண்மையான மந்திரம் விளைந்துநீற தானதே
உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே.
507
  
பன்னிரண்டு நாளிருத்திப் பஞ்சவண்ணம் ஒத்திட
மின்னியவ் வெளிக்குள்நின் றுவேரெடுத் தமர்ந்தது
சென்னியான தலத்திலே சீவன்நின் றியங்கிடும்
பன்னியுன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்ம மாவரே.
508