சித்தர் இங்கு இருந்தும் என்னபித்தன் நாட்டிருப்பரே; அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களுக்கெ லாமொன்றே. | 531 |
| |
மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லிரேல் வேந்தன் ஆகி மன்றுளாடும் விமலன் பாதம் காணலாம் கூந்தலம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாதுஇஃது உண்மையே. | 532 |
| |
சருகருந்தி நீர் குடித்துச் சாரல்வாழ் தவசிகாள் ! சருகருத்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே; வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை சுகிப்பிரேல் வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே. | 533 |
| |
காடுமேடு குன்றுபள்ளம் கானின் ஆறகற்றியும் நாடு தேசம் விட்டலைவர் நாதன் பாதம் காண்பரோ? கூடுவிட்டு அகன்றுஉன் ஆவி கூத்தனூர்க்கே நோக்கலால் வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே. | 534 |
| |
கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும் மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும் சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும் வெட்ட வெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே. | 535 |
| |
தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் பொங்கல் வைத்து ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட நங்கச் சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே. | 536 |
| |
ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர் பூசையோடு நேமநிட்டை பூரிக்கச் செய் பாதகர் காசினியில் ஏழுநரகைக் காத்திருப்பது உண்மையே. | 537 |
| |
நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம் வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர் தம் இட்டுமே மோசம் பொய்புனை சுருட்டு முற்றிலும்செய் மூடர்காள் ! வேசரிக ளம்புரண்ட வெண்ணீறாகும் மேனியே. | 538 |