பக்கம் எண் :

36தமிழ்ஒளி கவிதைகள்2

மஞ்சூரி தலை நகரம் மக்கள்படை வசமாகி 
       ‘சியாங்-கே-ஷேக்’கின்
நெஞ்சத்தில் நெருப்பேற்ற நீள்சீன மதிற்சுவர்கள் 
       நிமிர்ந்து பார்த்து,
‘அஞ்சாத வீரர்களே வருக’ எனக் கைகாட்டி 
       அழைப்புக் கூற
செஞ்சேனை வெற்றியொடும் திசையதிர நடக்கின்ற 
       செய்தி கேளீர்!

செஞ்சேனை அடைகின்ற வெற்றியெலாம் இன்றைக்குச் 
       செகத்தி லுள்ள
வஞ்சகர்க்கு மரணபயம்; வையத்தின் புதுமுரசம்; 
       தொழிலா ளர்தம்
நெஞ்சத்தின் ஆசை ஓளி; நிலமங்கை நெஞ்சினிக்கும் 
       வாகை மாலை!
நஞ்சுதலைப் பரம்பரக்கர் மடிகின்றார்! சத்யயுகம் 
       எழுக நன்றே! 

‘முன்னணி’ - 1948